நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விபத்துக்கள் பதிவாகிவருகின்றது. இவ்வாறு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பலர் படுகாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இன்று தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர் 30 வயது மதிக்கதக்க 5 அடி உயரமும் பொது நிறம் உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காற்சட்டை வெள்ளை ரீசேட் அணிந்திருந்ததுடன் உலப்பனை, வட்டவளை- அட்டன் சென்ற பயணசீட்டு உள்ளதுடன் இவர் கண்டியைச் சேர்ந்தவர் என்றும் அறியமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கையை காட்டி புகையிரத தண்டவாளம் முன் புகையிரதம் வரும்போது நின்றுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






