அண்மையில் உலக அளவில் பிரபல்யம் அடைந்த இலங்கைப்பாடகி யொஹானி டி சில்வாவின் யின் மெனிக்கே மகே ஹித்தே பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அமைப்புதான் காரணம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்ப்டடுள்ளது.
இலங்கை மக்கள் மீது இந்தியா தற்போது அதீத கவனத்தை செலுத்திவரும் நிலையில் தன் ஓரங்கமாக மெனிக்கே யொஹானியின் பாடலும் பிரபலமாகியது.
இந்நிலையில் , அதற்குப் பின்னால் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டிருக்கலாம் என்று இலங்கையின் பிரசித்திபெற்ற பேராசிரியரான நளிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பேராசிரியரான நளிந்த சில்வா இதனைக் கூறியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.







