கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் அத்தியட்சகர் அஸ்லாம் ஹசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துகள் இவ்வாறு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






